2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆம் அமர்வில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆம் அமர்வு 2020 செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த அமர்வின்போது 'உலக மனித உரிமைகளை இற்றைப்படுத்தல்' என்னும் தொனிப்பொருளின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரினாலும் இலங்கை தொடர்பான தீர்மானம் 30/1 தொடர்பில் மையக் குழு சார்பில் ஐக்கிய இராச்சியத்தினாலும் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பற்றியும் இந்த அறிக்கைகள் ஊடாக இலங்கை சம்பந்தமாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இலங்கையின் நிலைப்பாட்டினை தௌிவுபடுத்தி சமர்ப்பிக்கப்பட்ட பதில் அறிக்கை பற்றியும் வெளிநாட்டு அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதோடு, இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |