• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெரவலபிட்டியவில் 300 மெகாவொட் இரண்டாவது ஒருங்கிணைந்த சுழற்சி திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணித்தல்
- எதிர்காலத்தில் நாட்டில் உருவாகக்கூடிய மின்சார நெருக்கடிக்கு மாற்று வழியாக கெரவலபிட்டியவில் 300 மெகாவொட் இரண்டாவது ஒருங்கிணைந்த சுழற்சி திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் இந்த மின் உற்பத்தி நிலையத்தை சுயாதீனமான மின்சக்தி கருத்திட்டமொன்றாக தனிப்பட்ட முதலீட்டின் ஊடாக கட்டுதல், உடமையாக்கல், தொழிற்படுத்தல், மாற்றுதல் (BOOT) என்னும் வர்த்தக மாதிரியின் கீழ் நிர்மாணித்து நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி நடைமுறைக்கு அமைவாக பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை இனங்காண்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.