• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான ஓட்ட நிலையில் இல்லாத வாகனங்களை பழுதுபார்த்து பயன்படுத்துதல் அல்லது அகற்றுதல்
- உரிய முறையில் பராமரிக்கப்படாததன் விளைவாக தற்போது பயன்படுத்த முடியாத வாகனங்கள் பாரியளவில் அரசாங்க நிறுவனங்களில் உள்ளமை பற்றி அவதானிக்கப்பட்டுள்ளதோடு, 2020 ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்றுக்கு பழுதுபார்த்து பயன்படுத்தக்கூடிய 4,116 வாகனங்கள் மற்றும் அகற்றுவதற்கு ஏற்ற 5,588 வாகனங்கள் உள்ளதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க பழுதுபார்த்து பயன்படுத்துவது பயனுள்ளதாக அமையக்கூடிய வாகனங்களை பழுதுபார்ப்பதற்கும் உரிய நிறுவனங்களுக்கு நிதி ஏற்பாடுகள் இல்லாத சந்தர்ப்பங்களில் தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் ஊடாக அதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கும் இவ்வாறு பழுதுபார்க்கப்படும் வாகனங்களை போதுமானளவு வாகனங்கள் இல்லாத அரசாங்க நிறுவனங்களுக்கு நிதி அமைச்சிலுள்ள கணக்குத் தணிக்கையாளர் நாயகம் அலுவலகத்தின் ஊடாக முறையாக வழங்குவதற்கும் பழுதுபார்க்கமுடியாத வாகனங்களை முறையான வழிமுறையினை பின்பற்றி அகற்றுவதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.