• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் இயற்கை வாயு பற்றிய தேசிய கொள்கை
- இலங்கையில் இயற்கை வாயு பற்றிய வரைவு தேசிய கொள்கையை ஆராய்ந்து தேவையான திருத்தங்களை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றினை நியமிப்பதற்கு 2020 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட 17 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட 'இயற்கை வாயு பற்றிய தேசிய கொள்கையானது' வலுசக்தி அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இதன் பொருட்டு அதன் கொள்கை அங்கீகாரத்தினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.