2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகிய நிறுவனங்களின் மீண்டுவரும் செலவினங்களுக்காக பொதுத் திறைசேரியிடமிருந்து நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்த – COVID – 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு என்பவற்றின் வருமானம் குறைவடைந்ததனால் இந்த நிறுவனங்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்கு இயலாமற் போயுள்ளது. ஆதலால் 2020 செப்ரெம்பர் மாதம் தொடக்கம் திசெம்பர் மாதம் வரையிலான 04 மாத காலத்திற்கு இந்த நிறுவனங்களின் அத்தியாவசிய மீண்டுவரும் செலவினங்களுக்கான நிதி ஏற்பாடுகளை பொதுத் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்துடன் இந்த நிறுவனங்களின் வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு திறமுறை திட்டங்களை வகுத்தமைத்து பொதுத் திறைசேரியின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |