2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பினை வரைதல் – இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு 2015 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தம் காரணமாக எழுந்துள்ள முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை தவிர்ப்பதற்காக குறுகியகால நடவடிக்கையொன்றாக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தினை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2020‑08‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலமானது நீதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலமானது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 13 ஆவது திருத்தத்துடன் ஒத்தியல்கின்றதெனவும் அரசியலமைப்பின் 82(5) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் 2/3 இற்கு குறையாத வாக்குகளினால் அங்கீகரிப்பித்துக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றதெனவும் சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்துடன் 2020‑08‑19 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டவாறு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப வரைவினை வரையும் பொருட்டு பின்வருவோர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
* சனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் த சில்வா - (தலைவர்); * சனாதிபதி சட்டத்தரணி திரு.காமினி மாரப்பன; * சனாதிபதி சட்டத்தரணி திரு.மனோகர த சில்வா; * சனாதிபதி சட்டத்தரணி திரு.சன்ஜீவ ஜயவர்தன; * பேராசிரியர் (திருமதி) நஷீமா கமூர்தீன்; * கலாநிதி (திரு) ஏ.சர்வேஷ்வரன்; * சனாதிபதி சட்டத்தரணி திரு.சமந்த ரத்வத்தே; * பேராசிரியர் (திரு) வசந்த செனவிரத்ன; * பேராசிரியர் (திரு) ஜீ.எச்.பீரிஸ். |