• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்கு முகாமைத்துவத்திற்காக தரவுத் தள முகாமைத்துவ முறைமையினை கொள்வனவு செய்தல்
- நாட்டில் வௌிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத்தின் போது தற்போது நடைமுறையிலுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதேபோன்று எதிர்கால அபிவிருத்திகளின் பொருட்டும் பயனுள்ள வகையில் வசதிகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் புதிய தரவுத் தள முகாமைத்துவ முறைமையொன்றினை கொள்வனவு செய்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் 2019 யூன் மாதம் 07 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த தரவுத் தள முகாமைத்துவ முறைமையினை வழங்கி, தாபித்து, நடைமுறைப்படுத்தி பேணுவதற்காக சருவதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் இந்த கேள்வி தொடர்பில் முன்வைத்துள்ள சிபாரிசுகள் மற்றும் உத்தேச கொள்வனவு சம்பந்தமாக இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையின் கருத்துக்கள் மற்றும் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குறித்த கேள்வியை சிங்கப்பூரின் SimCorp Pte. Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.