• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்க வங்கி அமைப்பினை முறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைத்தல்
- COVID - 19 தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்காக அரசாங்க வங்கி அமைப்பும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களும் முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் செயலாற்றுதல் வேண்டும். ஆயினும், குறித்த அரச வங்கிகள் தாபிக்கப்பட்டதன் ஆரம்ப நோக்கங்களிலிருந்து விலகியும் உரிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கை முறைகள் என்பவற்றை மீறியும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களை இனங்கண்டு மீண்டும் எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் ஏற்படாதவாறு சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்கவின் தலைமையில் உரிய துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றினை நியமிப்பதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.