• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பொது நீரேந்து முகாமைத்துவ அணுகுமுறையொன்றைச் செயற்படுத்துவதற்காக மூலோபாய பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமித்தல்
- இலங்கையில் பொது நீரேந்து பிரதேசங்களை பயனுள்ளதாக முகாமிக்கும் பொருட்டு தற்போது ஏற்புடையதாகும் கொள்கைகள் அனைத்தையும் மீளாய்வு செய்து தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்காக நிலவும் நீரின் அளவு உட்பட அதன் தரத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் உரிய சகல தரப்பினர்களுக்கும் இடையே ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் மூலோபாயங்களை தயாரிப்பதற்கான பிரேரிப்பினை முன்வைக்கும் பொருட்டு சுற்றாடல் நிபுணர் பேராசிரியர் (திரு) சி.எம்.மத்தும பண்டாரவின் தலைமையில் நீர் முகாமைத்துவ துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.