2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக நாணயக் கடிதங்களை திறக்கும் பொருட்டு வழங்கப்பட்ட திறைசேரி உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்த - Lanka Coal Company (Pvt.) Ltd., கம்பனியினால் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குரியதாக பொதுத் திறைசேரியினால் மக்கள் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள 11 பில்லியன் பெறுமதி மிக்க திறைசேரி உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் காலம் 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்த திறைசேரி உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் காலத்தை குறித்த திகதியிலிருந்து மேலும் ஒரு (01) வருடத்தால் நீடிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |