2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொரகொல்ல நீர்மின் உற்பத்தி கருத்திட்டத்தின் பணிகளை பூர்த்திச் செய்வதற்கான திகதியை நீடித்தலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் முடிவடையும் திகதியை நீடித்தலும் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடலின் மூலம் செயற்படுத்தப்படும் பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 1 ஆம் கட்டத்தின் கீழ் மொரகொல்ல நீர்மின் உற்பத்தி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்ட கால தாமதத்தினால் கடன் தொகையின் செல்லுபடியாகும் காலமானது 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆயினும் உரிய பெறுகை செயற்பாட்டில் நிகழ்ந்துள்ள காலதாமதம் காரணமாக கருத்திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்யும் திகதி மற்றும் கடன் முடிவடையும் திகதி என்பவற்றை தொடர்ந்தும் திருத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிணங்க மொரகொல்ல நீர்மின் உற்பத்திக் கருத்திட்டத்தின் முடிவடையும் திகதியை 2023 ஒக்றோபர் மாதம் 31 ஆம் திகதி வரையும் கடன் முடிவடையும் திகதியை 2024 யூலை மாதம் 31 ஆம் திகதி வரையும் நீடிப்பதற்குரியதாக மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |