• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
- உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களில் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 46 குடும்பங்களுக்கு மாகாண மதிப்பீட்டாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வீட்டுக் கூலியினை தொடர்ந்தும் 2019 மே மாதம் 31 ஆம் திகதியிலிருந்து 2020 செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை செலுத்துவதற்கும் மண்சரிவு அபாய நிலைமையினால் அப்புறப்படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 118 புதிய வீடுகளை அனர்த்த முகாமைத்துவம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் தலையீட்டில் விசேட கருத்திட்டமொன்றாக வேறு பொருத்தமான இடமொன்றில் நிர்மாணிப்பதற்கும் உரியதாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.