• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - 05 இல் அமைந்துள்ள லும்பினி அரங்கினை நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைத்தல்
- 1952 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட லும்பினி அரங்கில் தற்போது கிடைக்கக்கூடியதாகவுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாததோடு, அதன் ஒலி கட்டுப்பாட்டு முறைமை, இருக்கைகளின் அளவு, துப்பரவேட்பாட்டு வசதிகள் போன்றவை காலத்திற்கு ஏற்ற விதத்தில் விருத்தி செய்யப்படவில்லை. ஆதலால் இதனை நவீனமயப்படுத்தி புனரமைக்கும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும் வடிவமைத்து நிர்மாணிக்கும் அடிப்படையில் தேசிய போட்டி கேள்வி முறையினை பின்பற்றி பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்குமாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.