• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பட்டுள்ள காலப்பகுதியை நீடித்தல்
- தொழில்கொள்வோர், ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரை யாடல்களின் போது உடன்பட்டவாறு COVID - 19 தொற்று காரணமாக 2020 மே மற்றும் யூன் மாதங்கள் இரண்டிலும் வேலையின்றி வீடுகளிலேயே ஊழியர்கள் இருக்கவேண்டிய தேவை நிலவிய நிறுவனங்களைச் சேரந்த ஊழியர்களுக்கு அவர்கள் இறுதியாகப் பெற்ற முழுச் சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்குரிய அடிப்படைச் சம்பளத்தின் 50 சதவீதம் அல்லது 14,500/- ரூபா என்னும் இரண்டில் அனுகூலமான தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் இதற்கமைவாக நடவடிக்கை எடுத்து 2020 யூலை மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்கு உரிய தரப்பினர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படு தொடர்பிலான தகவல்கள் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.