2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மன்னாரிலுள்ள கரையோர வளையத்தில் உயர்தரமான இல்மனைற்றை அகழ்தல் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட ஊடக அறிக்கைகள் - அவுஸ்திரேலியா கம்பனியொன்று உள்நாட்டுக் கம்பனியொன்றுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக மன்னாரிலுள்ள கரையோர வளையத்தில் இல்மனைற் பெற்றுக்கொள்ளும் கருத்திட்டத்திற்குரியதாக அகழ்வுகளை மேற்கொள்கின்றதெனவும் எதிர்காலத்தில் இந்த அகழ்வுகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதெனவும் விடயங்களை முன்வைத்து ஆங்கில நாளிதழொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிக்கை மற்றும் இது சம்பந்தமாக இணையதளத்தில் வௌியிட்டுள்ள கருத்திட்ட அறிக்கை தொடர்பிலும் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இத்தகைய அகழ்வு சம்பந்தமான அனுமதி வழங்கவேண்டிய நிறுவனம் அதன் பொருட்டு எவ்வித அனுமதியும் வழங்க வில்லையென அமைச்சரானவர் அமைச்சரவைக்கு மேலும் அறிவித்தார். இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைள் பற்றி விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |