2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2020 சிறு போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் - 2020 ஆம் ஆண்டிற்கான சிறு போக நெல் அறுவடை யூலை மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட ஏனைய பிரதேச மற்றும் கிராமிய மட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பயிர்செய்யப்பட்டுள்ள நிலப் பிரதேசத்திற்கு அமைவாக விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக்கூடுதலாக 5,000 கிலோ கிராம் வீதம் தரம் மிக்க சம்பா, நாடு, மற்றும் கீரி சம்பா ஆகிய வகைகளைச் சேர்ந்த நெல் கிலோ ஒன்று சார்பில் 50/- ரூபா மற்றும் ஈரப்பதத்துடனான நெல் கிலோ ஒன்று சார்பில் 42/- ரூபா என்னும் உத்தரவாத விலையினைப் பெற்றுக் கொடுத்து உத்தேச நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |