• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மின்சாரப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று காரணமாக 2020 மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டின் மக்கள் தமது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டி நேரிட்டமையினால் பல்வேறுபட்ட துறைகளில் தொழில் புரிந்தவர்களின் வருமானம் குறைவடைந்தது. இந்த நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மின்சார பட்டியல்களுக்காக வழங்கப்படவேண்டிய நிவாரணம் தொடர்பிலான பிரேரிப்புகளை உள்ளடக்கிய சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரிப்புகளை பொதுத் திறைசேரியின் உத்தியோ கத்தர்களின் ஊடாக மேலும் ஆராய்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் சம்பந்தமாக அவருடைய பிரேரிப்புகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.