2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் - கட்டம் II (618 பாலங்கள்) மற்றும் கட்டம் III (490 பாலங்கள்) - கிராமிய பாலங்கள் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் கடன் நிதியின் மூலம் 537 பாலங்களும் இந்தக் கருத்திட்டத்தின் III ஆம் கருத்திட்டத்தின் கீழ் நெதர்லாந்து கடன் நிதியின் மூலம் 463 பாலங்களும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிராமிய பாலங்களும் அடங்கலாக முறையே மேலும் 81 பாலங்களும் 27 பாலங்களும் ஆரம்ப விலைகளின் கீழேயே நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வௌ்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நிகழ்ந்துள்ள ஒப்பந்த மாற்றங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கிராமிய பாலங்கள் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்திற்கான 100 மில்லியன் ஐக்கிய இராச்சிய பவுண்கள் கொண்ட ஆரம்ப ஒப்பந்த பெறுமதியினை 114.19 மில்லியன் ஐக்கிய இராச்சிய பவுண்களாகவும் இந்தக் கருத்திட்டத்தின் III ஆம் கட்டத்திற்கான 105 மில்லியன் யூரோக்கள் கொண்ட ஆரம்ப ஒப்பந்த பெறுமதியினை 105.25 மில்லியன் யூரோக்களாகவும் திருத்தும் பொருட்டு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |