2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் கையிஷூ விஞ்ஞான கல்வியகத்திற்கும் (Guizhu Academy of Sciences) இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை உள்ளடக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் கையிஷூ விஞ்ஞான கல்வியகத்திற்கும் (Guizhou Academy of Sciences) இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இரு தரப்புக்கும் இடையில் இனங்காணப்படும் தகவல்களை பரிமாறிக் கொள்தல், ஆராய்ச்சி நிதிகளை ஏற்பாடு செய்துகொள்வதற்கு ஒத்துழைப்புடன் செயலாற்றுதல் மற்றும் இணைந்த பட்டம் / பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |