2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கம்பஹா விக்கிரமஆரச்சி ஆயுள்வேத நிறுவகத்தை முழுவிருத்தியடைந்த பல்கலைக்கழகமொன்றாக தரமுயர்த்துதல் - கம்பஹா விக்கிரமஆரச்சி ஆயுள்வேத நிறுவமானது தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் களனி பல்கலைக்கழகத்தின் துணை உயர் கல்வி நிறுவனமொன்றாக நடாத்திச் செல்லப்படுவதோடு, இதன் மூலம் ஆயுள்வேதம் மற்றும் அதுசார்ந்த விஞ்ஞான பட்ட மற்றும் பட்டபின் படிப்பு பட்டங்களை வழங்கி வருகின்றது. 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த நிறுவனத்தை முழுவிருத்தியடைந்த பல்கலைக்கழகமொன்றாக தரமுயர்த்துவதற்கு இணங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க நாட்டின் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவ முறையினை ஆராய்வதற்கு முன்னுரிமை அளித்து நடாத்திச் செல்லப்படும் பல்கலைக்கழகமொன்றாக கம்பஹா விக்கிரமஆரச்சி ஆயுள்வேத நிறுவகத்தை தரமுயர்த்தும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |