• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனை விதிக்கப்பட்ட ஆட்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையில் ஒப்படைப்பதற்காக செய்துகொள்ளப்படவுள்ள உடன்படிக்கை
- இலங்கையில் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை விதித்து சிறையிலிடப்பட்ட வேறு நாட்டு பிரசை ஒருவருக்கு அவருடைய நாட்டிலேயே குறித்த தண்டனையை அனுபவிப்பதற்கும் வௌிநாடொன்றில் இத்தகைய தண்டனை யொன்றுக்கு ஆளாகும் இலங்கையர் ஒருவருக்கு குறித்த தண்டனையை இலங்கையிலேயே அனுபவிப்பதற்கு இயலுமாகும் வகையில் இலங்கைக்கு கையளிப்பதற்கும் உரியதான ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் செயலாற்றுவதற்கு இலங்கைக்கும் உரிய ஏனைய நாட்டிற்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கிணங்க, இலங்கையிலும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிலும் தண்டனை விதிக்கப்பட்டவர்களிலிருந்து பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றஞ்சாட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள் தவிர ஏனை குற்றவாளிகளை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இயலுமாகும் வயைில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.