2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை அகற்றுதல் - முறையான அங்கீகாரமின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்து உரிய சுங்க நடவடிக்கை முறைகளை பின்பற்றி பிரசித்த ஏலத்தில் விற்பனை செய்வது கடைபிடிக்கப்பட்டு வந்த முன்னைய செயற்பாடாகும். ஆயினும் இந்த பீடி இலைகள் ஊடாக தயாரிக்கப்படும் பீடிகளைப் பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பிரதிகூலமான பாதிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்வரும் காலத்தில் இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை அழிக்கவேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |