• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலைக் கல்லூரியில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல்
- முப்படை மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றின் மத்தியதர உத்தியோகத்தர்களுக்கும் அதேபோன்று அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கும் பயிற்சியினை வழங்கும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலைக் கல்லூரியில் பாடநெறிகளை கற்பதற்காக 2009 ஆம் ஆண்டிலிருந்து வௌிநாடுகளைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் களுக்கும் கட்டணமின்றியும் கட்டணம் செலுத்தும் அடிப்படையிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க ஆசிய, மத்திய கிழக்கு, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு கட்டணம் செலுத்தும் அடிப்படையில் 12 வாய்ப்புகளும் கட்டணமின்றி 30 வாய்ப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. உரிய பாடநெறிகளை கற்பதற்கு 2020 ஆம் ஆண்டிலிருந்து முன்னோக்கியதாக சிங்கப்பூர் சார்பிலும் கட்டண மின்றி பாடநெறி வாய்ப்பொன்றினையும் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் பாடநெறி வாய்பொன்றினையும் வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.