2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ருவண்புர அதிவேகப்பாதை – தற்போதைய அரசாங்கத்தின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைக் கூற்றானது கஹதுடுவ – இங்கிரிய – இரத்தினபுரி - பெல்மடுல்லையிலிருந்து தெற்கு அதிவேகப்பாதையை இணைக்கும் ருவண்புர அதிவேகப்பாதை நிர்மாணத்தை பிரேரித்துள்ளது இக்கருத்திட்டத்தை வௌிநாட்டு நிதியங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் இக் கருத்திட்டத்தை உள்நாட்டு நிதியங்களின் கீழ் நடைமுறைப்படுத்தலானது நாட்டிற்கு கூடுதல் பயனுடையதென்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உள்நாட்டு வங்கிகளின் நிதியங்களை பயன்படுத்தியும் உள்நாட்டு நிர்மாண கம்பனிகளின் சேவைகளைக் கொண்டும் இவ் அதிவேகப்பாதையை நிர்மாணிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |