• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறோட்லண்ட்ஸ் நீர்மின்வலு கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான மதியுரைச் சேவைகள் தொடர்பில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்துடனான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்
- புறோட்லண்ட்ஸ் நீர் மின்வலு கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தமானது மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை 2017‑07‑14 ஆம் திகதியன்று பூர்த்திசெய்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இக் கருத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள், காணியை விடுவிப்பதிலான காலதாமதங்கள், உபகரண உற்பத்தியாளரின் மாற்றம் மற்றும் கடன் உடன்படிக்கையை நிறைவேற்றுவதிலான காலதாமதம் என்பன காரணமாக எதிர்பார்த்தவாறு இதனை பூர்த்திசெய்யமுடியவில்லை. ஆதலால், மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்துடன் நடைமுறையிலுள்ள மதியுரைச் சேவை ஒப்பந்தத்தின் ஒப்பந்த காலப்பகுதியை நீடிக்கவேண்டியுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கூறப்பட்ட மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை 2020‑07‑31 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.