• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 / 2020 ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல்
- 2019 / 2020 ஆண்டு சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தவதற்கான ஒப்பந்தம் 2020‑07‑31 ஆம் திகதியன்று முடிவடையவிருக்கின்ற போதிலும், COVID – 19 உலகளாவிய முழுப்பரவல் நோய் நிலமையின் விளைவாக புதிய வழங்குநர்களை தெரிவுசெய்வதற்கான பெறுகை நடைமுறையினை மேற்கொள்ள முடியாமற்போயுள்ளது. ஆதலால், நாடு அனுபவிக்கும் தற்போதைய நிலைமை அதேபோன்று தற்போதைய சந்தை நிலைமைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 2020‑08‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑01‑31 ஆம் திகதிவரை தற்போதைய வழங்குநருக்கே கையளிப்பதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.