• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத் திட்டங்களுக்கும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்கும் நிதியிடல்
- மத்திய அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் I ஆம் பகுதிக்கான வேலைகளை ஆரம்பிக்கும் பொருட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் II ஆம் பகுதியின் வேலைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று 100,000 கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் பணிகளும் தற்போது ஆரம்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கருத்திட்டங் களுக்குரிய கொடுப்பனவுகளைச் செய்வதற்கு 50 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. அதேபோன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்வழங்கல் கருத்திட்டங்களுக்குரிய அத்தியாவசிய நிதிப் பொறுப்புக்களை தீர்ப்பதற்கு 30 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதற்கிணங்க, இந்த இரண்டு நிறுவனங்களுக்குமான நிதித் தேவைகள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த வங்கிகளின் உரிய அதிகாரிகளுக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்கும் இதற்குத் தேவையான திறைசேரி பிணைகளை வழங்குவதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.