• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை ஏற்றுமதியின் மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியை தற்காலிகமாக இடைநிறுத்துத
- தற்போது நாட்டில் நிலவும் COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் தேயிலை தொழிற்துறையானது தேயிலை கைத்தொழிற்சாலைகளின் செயற்பாட்டுப் பணிகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்தல், தேயிலை இறக்குமதி செய்யும் பெரும்பாலான நாடுகளில் கொள்வனவு அளவு குறைந்துள்ளமை, விநியோக முகாமைத்துவத்தில் காணப்படும் பிரச்சினைகள், உற்பத்திகளின் தரத்தினை நிலையாக பேணுதல் போன்ற பிரதான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தேயிலை தொழிற்துறையை நிலையாக பேணுவதற்கு நிதி ரீதியிலான சலுகையொன்றாக ஏற்றுமதி செய்யப்படும் கிலோ ஒவ்வொன்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களிடமிருந்து தற்போது அறவிடப்படும் 3.50 ரூபாவைக் கொண்ட தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியை ஆறு (06) மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.