2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய லொத்தர் சபையினால் சீட்டிழுக்கப்படுக்கின்ற 'தரு திரி சம்பத்த' என்னும் புதிய லொத்தர் சீட்டினை அச்சிட்டு வழங்குவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியுள்ள அச்சிடல் ஒப்பந்தக் காலத்தை நீடித்தல் - 'சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை' பலப்படுத்துவதற்காக தேசிய லொத்தர் சபையினால் சீட்டிழுக்கப்படுக்கின்ற 'தரு திரி சம்பத்த' என்னும் லொத்தர் சீட்டினை அச்சிடும் பொருட்டு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியுள்ள ஒப்பந்த உடன்படிக்கை காலமானது 2020‑05‑12 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த காலத்தின் பின்னர், பொருத்தமான அச்சாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள பெறுகை செயற்பாடானது கொரோனா தொற்று நிலைமை காணரமாக இதுவரை பூர்த்தி செய்ய முடியாமற் போயுள்ளது. ஆதலால் இந்த லொத்தர் சீட்டினை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை முன்னர் உடன்பாடு காணப்பட்டுள்ள தகவுதிறன்கள் மற்றும் விலைகளின் கீழ் 2020‑05‑13 ஆம் திகதியிலிருந்து 2020‑11‑12 ஆம் திகதி வரையிலான ஆறு (06) மாத காலபப்குதிக்கு தொடர்ந்தும் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |