• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித் திட்டம் - 2020
- அரசாங்கத் துறையைச் சேர்ந்த நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டபின் படிப்பு பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டிலிருந்து மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இதன் கீழ் 2020 செப்ரெம்பர் மாதம் தொடக்கம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள அரசாங்க உத்தியோத்தர்களுக்கு வசதிகளை செய்வதற்காக யப்பான் அரசாங்கத்தினால் 269 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட (அண்ணளவாக 457 மில்லியன் ரூபா) நன்கொடையினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்த நன்கொடையினைப் பெற்றுக் கொள்வதற்கும் இதன் தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.