• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கி குழுமத்தினால் நிதியளிக்கப்படும் இனங்காணப்பட்ட முதலீட்டுக் கருத்திட்டங்களில் எதிர்பாரா அவசர நிலை பொறுப்பு ஆக்கக்கூறுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை COVID - 19 தொற்று நிலைமை காரணமாக முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கருத்திட்டங்களுக்காக பயன்படுத்துதல்
- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார துறைக்கு அப்பால் பல்வேறு பாதிப்புகளை நாடு எதிர்கொண்டிருப்பதனால் விவசாயத்துறையை மேம்படுத்துதல், இலத்திரனியல் கல்வி முறையை நடைமுறைப்படுத்துதல், வீட்டிலிருந்து கடமைகளை மேற்கொள்ளும் வழிமுறையொன்றை உருவாக்குதல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது நோய் பரவுவதைத் தடுத்தல் போன்ற துறைகளின்பால் துரிதமாக ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு நிதி உதவி வழங்குவது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உலக வங்கி குழுமத்தினால் நிதியளிக்கப்படும் நான்கு (04) முதலீட்டுக் கருத்திட்டங்களில் எதிர்பாரா அவசர நிலை பொறுப்பு ஆக்கக்கூறுகளின் கீழ் உள்வாங்கபபட்டுள்ள 56 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை மேற்குறிப்பிட்ட துறைகளில் துரிதமாக நடைமுறைப்படுத்தவேண்டிய கருத்திட்டங்கள் சார்பில் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.