2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களை கொள்வனவு செய்தல் - இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அரசாங்க, பகுதி அரசாங்க, கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பன சார்பில் வருடாந்தம் 350 பரீட்சைகளுக்கு மேல் நடாத்தப்படுவதோடு, இதன் காரணமாக இந்த திணைக்களத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நல்லிரவு வரை சேவை புரிய நேரிடுகின்றது. ஆதலால், தூர பிரதேசங்களிலிருந்து சேவைக்கு வரும் உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பன்னிபிட்டிய வீர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 'வியத்புர' மாடிவீட்டுத் தொகுதி யிலிருந்து மூன்று மாடி வீடுகளை இந்த திணைக்களத்தினால் கொள்வனவு செய்து உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |