• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018-2020 மாத்தறை நில்வலா எளிய அபிவிருத்தி கருத்திட்டத்தை மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு கையளித்தல்
- 2018 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'நில்வலா எளிய' அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் சுமார் 1,800 ஹெக்டயார் நிலப்பரப்பில் பரந்துள்ள 'கிரல கெலே' என்னும் சதுப்பு நிலப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டமானது தற்போது பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் மாத்தறை மாவட்டச் செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்திட்டம் பிரதேசமானது முக்கியமாக சதுப்பு நிலம், நீர்ப்பாசன கால்வாய் வழிகள் மற்றும் கண்டல் பிரதேசம் என்பவற்றைக் கொண்டுள்ளது. இத்தகைய பிரதேசமொன்றை அபிவிருத்தி செய்யும் போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிட்டிய மேற்பார்வை அத்தியாவசியமானதாகையால் இந்தக் கருத்திட்டத்தை மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு கையளித்து தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.