2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பூராவுமுள்ள குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் - சிறுநீரக நோய் பரவும் அவதானம் மிக்க 11 மாவட்டங்களில் (அநுராதபுரம், பொலன்நறுவை, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை, வவுனியா, குருநாகல், முல்லைத்தீவு, பதுளை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை) 82 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் வாழ்வாதார உதவியினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதன்கீழ் தற்போது குறைந்த வருமானம் பெறும் 25,320 சிறுநீரக நோயாளர்களுக்கு இந்த உதவித் தொகையானது மாதாந்தம் வழங்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவினை பெற்றுக் கொள்வ தற்காக காத்திருப்பு பட்டியலிலுள்ள மேலும் குறைந்த வருமானம் பெறும் 13,849 சிறுநீரக நோயாளர்களுக்கு இந்த கொடுப்பனவினை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |