• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய தொழில்சார் தகைமை கொண்டவர்களுக்கு 'திறன்கள் உரிமப்பத்திரமொன்றை' வழங்குதல்
- மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தேசிய தொழிற் தகைமை கட்டமைப்பு (NVQ) அறிமுகப்படுத்தப்பட்டு தேசிய ரீதியில் தகைமையினை வழங்கும் வழிமுறையொன்று நடாத்திச் செல்லப்படுகின்றது. இந்த வழிமுறைக்காகவுள்ள அங்கீகாரத்தினை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு சருவதேச தொழில் அமைப்பு மற்றும் இலங்கை சேவை சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய தொழிற்தகைமையுடையவர்களுக்கும் புலம்பெயர் வௌிநாட்டு தொழிலாளர்களுக்கும் 'திறன்கள் உரிமப்பத்திரமொன்றினை 'அறிமுகப்படுத்தும் நோக்கில் முன்னோடிக் கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நிர்மாணிப்பு, உபசரிப்புச் சேவை மற்றும் வீட்டு / பாதுகாப்பு வழங்கல் போன்ற துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் தொழிற் துறைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிணங்க, ஆகக்குறைந்தது ஒரு (01) வருடகால அனுபவத்துடன் கூடிய தேசிய தொழிற் தகைமை சான்றிதழ்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு திறன் அட்டையொன்றாக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக் குழுவினால் திறன்கள் உரிமப்பத்திரமொன்றை வழங்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.