2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலபே தகவல் தொழினுட்ப பூங்காவில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை மஹமெவ்னாவ பௌத்த கல்லூரிக்கு குறித்தொதுக்குதல் - மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியைத் தாபிப்பதற்காக மாலபே பிரதேசத்திலுள்ள சுமார் நான்கு (04) ஏக்கர் காணியினை சலுகை கொடுப்பனவு அடிப்படையில் வழங்குமாறு சேருவில வில்கம்வெஹெர சோமாவதி ரஜமஹா விகாராதிபதி தேரோ அவர்களினால் செய்யப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக மாலபே தகவல் தொழினுட்ப பூங்காவில் அமைந்துள்ள ஏக்கர் 02 றூட் 02 பேர்ச்சர்ஸ் 0.70 விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை இதன் பொருட்டு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய நோக்கத்திற்காக இந்த காணித்துண்டினை மஹமெவ்னாவ பௌத்த கல்லூரிக்கு 30 வருட கால குத்தகை அடிப்படையில் குறித்தொதுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமை்சசராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |