• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலையத்தில் விமானப்படை முகாமொன்றைத் தாபிப்பதற்காக 200 ஏக்கர் காணியினை சுவீகரித்த
- இலங்கையிலுள்ள விமான நிலையங்கள் அனைத்தினதும் பாதுகாப்பினை உறுதி செய்வது இலங்கை விமானப்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்துசமுத்திர வலயத்தில் திறமுறை ரீதியில் முக்கியத்துவமிக்க விமான நிலையமொன்றாக இனங்காணப்பட்டுள்ள மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திலுள்ள விமானப்படை முகாமுக்குச் சமமான முகாமொன்றைத் தாபிப்பது அத்தியாவசியமானதாகும். மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சருமானவர் சமர்ப்பித்த பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 200 ஏக்கர் காணியை இதன் பொருட்டு ஒதுக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.