2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாண குடா நாட்டில் இரண்டு குளங்களின் கரைகளை பாதுகாத்தல் மற்றும் தூர்வாரும் முன்னோடி கருத்திட்டம் சார்பிலான வேலை ஒப்பந்தத்தை வழங்குதல் - யாழ்ப்பணம் நகர பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நகரம் சார்ந்த சேவைகளையும் பொது நகர இடங்களையும் விருத்தி செய்வதற்காக திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக கடன் தொகையொன்றை சருவதேச அபிவிருத்தி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியை யாழ்ப்பாணம் பிள்ளையார் கோயில் குளம் மற்றும் தேவர் குளம் ஆகிய இரண்டு குளங்களினதும் கரைகளை பாதுகாத்து தூர்வாரும் முன்னோடி கருத்திட்டத்திற்கான கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க மேற்போந்த கருத்திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தை 113.04 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வற் இன்றி) தொகைக்கு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |