2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பசளைக் கொள்கையினைத் தயாரித்தல் – 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் பசளை இறக்குமதி, உற்பத்தி, தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்றவற்றை முறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமானது இதுவரை எந்தவித திருத்தத்திற்கும் உட்படாததோடு தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு இந்த சட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் இதுவரை முறையான தேசிய பசளைக் கொள்கை பிரகடனமொன்று இல்லாமையினால் இந்த துறையின் மேம்பாட்டிற்கு பாரிய தடை நிலவுகின்றதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க தேசிய பசளைக் கொள்கையொன்றை வரைவதற்காக துறைசார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் வரைவு சம்பந்தமாக ஏனைய தரப்பினர்களினதும் பொது மக்களினதும் கருத்துக்களைப் பெற்று இறுதி வரைவினை தயாரிப்பதற்குமாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |