2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பிரதான கட்டுப்பாட்டறையை நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக விருத்தி செய்தலும் புதிய இடமொன்றில் தாபித்தலும் - இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாக 1979 யூன் மாதம் 05 ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பானது ஆரம்பிக்கப்பட்டதோடு, 40 வருடங்களாக அதன் பிரதான கட்டுப்பாட்டறை அதே கட்டடத்தில் நடாத்திச் செல்லப்பட்டுவருகின்றது. தற்போது பிரதான கட்டுப்பாட்டறை சார்பில் தேவையான வசதிகளுடன் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கட்டுப்பாட்டறையை நவீன தொழினுட்பத்துடன்கூடிய டிஜிட்டல் ஒளிபரப்புக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டு புதிய கட்டடத்தை விருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |