• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒலிபரப்பு மற்றும் ஔிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் வழங்குதலை முறைப்படுத்துதல்
– ஒலி மற்றும் ஔி பரப்பு சேவைகளை நடாத்திச் செல்வதற்கு 1966 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சட்டத்திலும் 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்திலுமுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தற்போது தனியார் ஒலிபரப்புக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கிணங்க தற்போது 27 தனியார் ஒலிபரப்பு அனுமதி பத்திரங்களும் 54 ஔிபரப்பு அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் 18 ஒலிபரப்பு அனுமதி பத்திரங்களும் 28 ஒளிபரப்பு அனுமதி பத்திரங்களும் மாத்திரம் தற்போது செயற்பாட்டு நிலையிலுள்ளன. இந்த அனுமதி பத்திரங்கள் வழங்குவதற்குரிய செயற்பாடு சம்பந்தமாக அராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவினால் ஒலிபரப்பு மற்றும் ஔிபரப்பு ஆகிய இரு வகை ஊடகங்கள் தொடர்பாகும் செயலாற்றுவதற்கு புறம்பான நிறுவனங்கள் இருக்கவேண்டிய தேவையை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதற்காக "ஒலி ஔி பரப்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு' என்னும் வரைவொன்றினையும் சமர்ப்பித்துள்ளது. இந்த வரைவினை மேலும் மீளாய்வு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் ஒலி மற்றும் ஔிபரப்பு அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் விடயத்தை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்துவதன் மூலம் இந்த ஆணைக்குழுவின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கும் இந்த துறையில் அனுபவமிக்க நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.