2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்திக்காக குறித்தொதுக்குதல் - நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதும் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான ஒரு ஏக்கருக்கு மேற்படாத அத்துடன் கொழும்பு மாவட்டத்திற்கு வௌியே இரண்டு ஏக்கர்களுக்கு மேற்படாத காணிகளை குத்தகைக்களிக்கும் போது அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரமானது இந்த அதிகாரசபையின் முகாமைத்துவ சபைக்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் 2013 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபையினால் அங்கீகரிக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 18(1) ஆம் பிரிவின் கீழ் விடயத்திற்கு பொறுப்பான மாண்புமிகு அமைச்சரின் அங்கீகாரத்துடன் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிக்குள் கையளிக்கப்பட்ட 23 காணித் துண்டுகள் தொடர்பிலான முன்னேற்றம் பற்றி நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |