2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை புனித அரசமரம் அமைந்துள்ள காணியை இறையிலி பத்திரமொன்றின் மூலம் களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு உறுதியான கொடையொன்றாக வழங்குதல் - களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள சுமார் 7½ ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட 07 காணித் துண்டுகள் காணி ஆணையாளர் திணைக்களத்தினால் இந்த நம்பிக்கை பொறுப்புச் சபைக்கு மூன்று (03) நீண்டகால குத்தகைகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபையினால் இந்தத் திணைக்களத்திடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப் படையில் வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளும் முறையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையினாலும் இந்த காணியினை களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு வழங்குவது இந்த புண்ணிய பூமியை அபிவிருத்தி செய்வதற்கு பலமாக அமையும் என்பதனாலும் குறித்த காணித் துண்டுகளை இறையிலி பத்திரமொன்றின் மூலம் உடைமை மாற்றுவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, தற்போது குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த காணித் துண்டுகளை இறையிலி கொடையொன்றாக களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு வழங்குவதற்கும் தற்போது அபிவிருத்தி செய்து பயன்படுத்தப்பட்டுவரும் மீதிக் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கை களுக்குத் தேவைப்பட்டால் சுவீகரிக்கப்படும் அளவினை நட்டஈடு செலுத்தாது பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, நீண்டகால குத்தகையொன்றாக இந்த நம்பிக்கை பொறுப்புச் சபைக்கு வழங்குவதற்குமாக புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |