• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான புகையிரத பாதையை இரட்டை பாதைகளாக மாற்றுதல்
- தற்போதுள்ள கண்டி - பேராதனை புகையிரத பாதைக்கு ஒருங்கிணைவாக நிர்மாணிக்கப்படும் இரட்டை புகையிரதப் பாதையானது அண்ணளவாக 6.0 கிலோமீற்றர்கள் நீளம் கொண்டதோடு, தற்போது கண்டி தொடக்கம் கெட்டம்பே புகையிரத கடவை வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பயணக்காலத்தை மேலும் குறைக்கும் நோக்கில் கெட்டம்பே புகையிரத கடவைக்கும் சரசவி உயனவிற்கும் இடையில் தற்போதுள்ள புகையிரத பாதைக்கு ஒருங்கிணைவாக விருத்தி செய்யப்பட்ட சைகை முறைமையுடன் கூடிய மேலதிக பாதையொன்றை திரட்டிய நிதியத்தின் நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கும் 00 மைல் 37 சங்கிலி என்னும் இடத்தில் மகாவலி கங்கைக்கு குறுக்காக பாலமொன்றை நிர்மாணிப்பதற்குமாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.