• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறிஞ்சதீவு (ஆனையிறவு - வடக்கு) உப்பளத்தை அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
- கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான குறிஞ்சதீவு (ஆனையிறவு - வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாட்டுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை இந்தச் செயற்பாடானது வெற்றியளிக்கவில்லை. இந்த உப்பளத்தின் செயற்பாட்டுப் பணிகளை மாந்தை உப்பு நிறுவனத்திற்கும் முறையான வழிமுறையினை பின்பற்றி தெரிவுசெய்யப்படும் முதலீட்டாளர் களுக்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்து வதற்காக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.