• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதிலிருந்து நிறுத்தி வைப்புக் காலத்தை நீடித்தல்
- 2019 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களினால் செலுத்தப்படவேண்டிய சுற்றுலா அபிவிருத்தி வரியினை செலுத்துவதற்கு 2020 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஒரு (01) வருட சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்பட்டவாறு அதிகரிக்காமையினால் உரிய சலுகைக் காலத்தை மேலும் நீடிப்பது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க சுற்றுலா அபிவிருத்தி வரியினை செலுத்துவதற்கான சலுகைக் காலத்தை 2020 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை மேலும் நான்கு (04) மாதங்களால் நீடிப்பதற்கும் இந்தக் காலப்பகுதிக்குரியதாக செலுத்தப்படாத சுற்றுலா அபிவிருத்தி வரியினை 2020 மே 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சமமான 20 தவணைகளில் அறிவிடுவதற்குமாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.