2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க காணி முகாமைத்துவ துரித நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்க காணிகளை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாத விதத்தில் உரிய குத்தகையை அறிவிடுவதற்கு எளிமையான வழிமுறை யொன்றை தயாரிப்பதற்குரியதான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு 2019 திசெம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் குழுவொன்றை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* குத்தகைதாரர்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய தண்டத் தொகைக்கான வட்டித் தொகையை பதிவழித்தல். >br> * நிலுவை குத்தகை கொடுப்பனவு சார்பில் குத்தகைதாரர்களுக்கு ஒரு (01) வருட சலுகைக் காலத்தை வழங்குதல். * வருடாந்த குத்தகைத் தொகையை நான்கு (04) தவணைகளாக செலுத்துவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல். * வருடாந்த குத்தகைத் தொகையை குத்தகைக் கால எல்லையின் முதல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் செலுத்தும் குத்தகைத்தாரர்களுக்கு 10 சதவீத கழிவினை வழங்குதல். * அஞ்சல் அலுவலகம், கடன் அட்டை, செல்லிடத் தொலைபேசி போன்ற முறைமைகள் மூலம் குத்தகைத் தொகையினை செலுத்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல். |