2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு அதிவேகபாதை நீடிப்பு கருத்திட்டத்திற்காக காணி சுவீகரித்தமையினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு சுயமாக மீளக் குடியமர்வதற்கான கொடுப்பனவினை வழங்குதல் - 2016 நவெம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் தெற்கு அதிவேகப்பாதை நீடிப்பு கருத்திட்டத்திற்காக காணி சுவீகரித்தமையினால் பாதிக்கப்பட்ட பிரதேச சபை அதிகார பிரதேசத்திற்குள் காணி உரிமையாகவிருந்தவர்களுக்கு சுயமாக மீளக் குடியமர்வதற்காக 150,000.00 ரூபா கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பனவு 2016 நவெம்பர் மதம் 18 ஆம் திகதியின் பின்னர் 500,0000.00 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரம்ப கட்டத்தில் காணி சுவீகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் 175 பேருக்கும் உரிய சுயமாக மீளக் குடியமர்வத்றகான கொடுப்பனவினை 500,000.00 ரூபா வரை அதிகரித்து செலுத்தும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |