2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டத்தின் கீழ் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி விரைவில் விருத்தி செய்யப்படவேண்டிய தெரிவுசெய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை விருத்தி செய்தல் - 2011 ஆம் ஆண்டிலிருந்து திறைசேரி பிணையின் மீது உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகைகளைப் பயன்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி புனரமைப்புக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் தற்போது இரண்டு கட்டடங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த இரண்டு கட்டங்களுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் தொகைலிருந்து சுமார் 1,580 மில்லியன் ரூபா சேமிப்பாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள "100,000 கிலோமீற்றர் மாற்று வீதி முறைமையினை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் விரைவில் விருத்தி செய்யப்பட வேண்டிய மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த மீதி நிதியினைப் பயன்படுத்தும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |