• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறு மாணவர்கள் இணையாமையும் மாணவர்கள் பாடநெறிகளை விட்டுச் செல்கின்றமையும் பற்றிய அறிக்கை
– அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவன மொன்றில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் பாடநெறியொன்றை கற்பதற்கு 2017 ஆம் ஆண்டிலிருந்து வட்டியற்ற மாணவர் கடன் திட்டமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 கட்டங்களின் கீ்ழ் 3,731 மாணவர்களுக்கு இந்த கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இவர்களுள் 202 மாணவர்கள் பல்வேறுபட்ட காரணங்களின்மீது பாடநெறிகளை விட்டு சென்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ள மாணவர்களுக்கு சலுகையினை வழங்குவதற்கும் எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உயர் தொழில்களை உருவாக்கும் பாடநெறிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்குரியதாக உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.